Academics

தமிழ்த் துறை


“பயிற்றுப் பலகல்வி தந்து இப்பாரை உயர்த்திட வேண்டும”;- என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க 2008ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஓர் உறுப்புக்கல்லூரியாகத் துவக்கப்பட்ட இக்கல்லூரியில் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி-குமுளுர் இலால்குடி) 2009-2010 ஆம் கல்வியாண்டு முதல் பி.லிட் தமிழ் இலக்கியம் (B.Lit Tamil) இளங்கலைப் பிரிவு துவங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் 2016-2017ஆம் கல்வியாண்டு முதல் முதுகலைத்தமிழ் இலக்கியமும் (MA Tamil), 26-08-2015 முதல் முனைவர்பட்ட ஆய்வு பிரிவும் (Ph.D) துவங்கப்பட்டு, கிராமபுர மாணவர்களின் இலக்கிய அறிவாற்றலையும், ஆராய்ச்சி மனப்பான்மையும் ஊக்குவிக்கும் வகையில் முழுச்சிறப்புடன் கூடியத் தமிழாய்வுத்துறையாக செயல்பட்டு வருகிறது.

தமிழாய்வுத்துறையில் ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியரும், ஒன்பது கௌரவ விரிவுரையாளர்களும் அற்பணிப்பு உணர்வோடு பணிபுரிந்து வருகின்றனர். இத்துறையின் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு இலக்கியக் கல்வியைப் பயிற்றுவிப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்;;ப்பேரவை வாயிலாகவும், கலைப்பண்பாட்டு மையம்; புத்தக வாசிப்பு மையம் வாயிலாகவும் மாணவர்களின் கலைப்பண்பாடு சார்ந்த பலத்திறமைகளை இனம் கண்டு ஊக்கப்படுத்தி வருகின்;றனர்.

இத்துறைப் பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் பன்னாட்டு அளவிலும் தேசிய அளவிலும் நடைபெற்றக் கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரை வழங்கியுள்ளனர். மேலும் பல தமிழ் இலக்கிய நூல்களை உருவாக்க்p தமிழன்னைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இத்துறைப் பேராசிரியர்கள் தமிழக அரசின் படைப்பாளார் விருதுகளையும் பன்னாட்டு விருதுகளையும் பெற்று மாணவர் சமூகத்திற்கு வழிக்காட்டியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகின்றனர்.

 

 

Notifications